பங்குச் சந்தை அறிமுகம்
பங்குச் சந்தை அறிமுகம் பங்குச் சந்தை என்றவுடனே பலர் இது சூதாட்டம் என்று செய்வது உண்டு. சில படித்தவர்காளுக்கே மட்டும் புரியும், என்று சொல்வது உண்டு. இப்படி ஒவ்வ்ருவரும் ஒவ்வொரு விதமாக சொல்வது உண்டு. ஆனால் உண்மை அது வல்ல. ஆம், பங்குச் சந்தை என்பது அவ்வளவு பெரிய புரிய இயலாத ஒன்றும் அல்ல. சிறிய அளவில் கணக்கு போடும் திறமை, பங்குச் சந்தைக்கு என்று சில அடிப்படை விதிகளை புரிந்து கொள்ளுதல் போதுமானது. சரி , உண்மையிலே இந்த பங்குச் சந்தை முதலீடு பாதுகாப்பானதா? பாதுகாப்பு இல்லைதான். எந்த வித ஆராய்ச்சி இல்லாமல் தொடரும் முதலீடு பெரும்பாலும் நஷ்டமாகவே முடியும். எல்லோராலும் இந்த பங்குச் சந்தையை சரியாக கணித்து விட முடியுமா? 100 சதவிகிதம் கணித்து விட முடியாது. சில நேரங்களில் கணிப்புகளை தாண்டியும் அதன் வேலையை காட்டி விடும். பிறகு நஷ்டம் தான் ஏற்படும். உதாரணமாக, நீங்கள் ஒரு நிறுவனம் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் முதலீடு தொகையோ உங்களிடம் சற்று குறைவாக இருக்கிறது. இப்பொழுது உங்களுக்கு தேவைப்படும் பணத்தை மக்களிடம் இருந்து பெற முயற்சிப்பதுதான் பங்குச் சந்தை. இன்னும் சற்று ...