Posts

Showing posts from February, 2019

ஹெல்த் பாலிசியின் அவசியம்

Image
ஹெல்த் பாலிசியின் அவசியம் ஒவ்வொரு நபரும் கண்டிப்பாக  ஹெல்த் பாலிசி எடுக்க வேண்டுமா? இந்த ஹெல்த் பாலிசி அவ்வளவு முக்கியமா என்றால் கண்டிப்பாக முக்கியம் தான். எல்லோருக்கும் செலவு என்பது சொல்லிக் கொண்டோ அல்லது சில திட்டமிடல் மூலம் முன்பே அறிந்து கொண்டு பணம் தயார் செய்து விடலாம். ஆனால், மருத்துவ செலவு என்பது மட்டும் சொல்லிக் கொண்டு வருவதில்லை. சிறிய அளவிலான பணம் என்றால் சமாளித்து விடலாம். சில லட்சங்கள் தாண்டி செலவு வந்தால் என்ன செய்வது? இங்குதான் ஹெல்த் பாலிசி தேவைப்படுகிறது. ஏதேனும் ஒரு சிறு ஆபரேஷன் செய்தாலே ஐம்பதாயிரம் தேவைபடுகிறது. இதையும் தாண்டி இதயம் சம்பந்தமான சிகிச்சை , அது இது என்று பிரச்சினை வந்தால் சமாளிப்பது மிக சுலபமான விஷயம் அல்ல. அதையும் தாண்டி பணம் புரட்டி விட்டு திரும்ப அந்த பணத்தை அடைப்பதற்குள் இன்னும் சுமை ஏறி விடுகிறது. இந்த நோய்கள் பற்றிய புள்ளி விவரங்கள் பார்த்தால் இதயம் மேலும் துடிக்க ஆரம்பித்து விடும். எனவே , இது போன்ற நேரத்தில் மெடிகிளைம் மூலமாக பண பிரச்சினைகள் தீர்க்கப்டும். ஹெல்த் பாலிசி அவசியமே!

கிரெடிட் கார்டு புகார்

Image
கிரெடிட் கார்டு புகார் ஏதோ ஒரு காரணத்திற்காக  கிரெடிட் கார்டு சம்பந்தமாக புகார் கொடுக்க வேண்டும் என்றால் கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்திடம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாலோ அல்லது அவர்களது பதில் உங்களுக்கு திருப்திகரமானதாக இல்லை என்றாலோ நீங்கள் அடுத்த கட்ட புகாருக்கு தயார் ஆகலாம். அதாவது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குகிற பேங்கிங் ஓம்புட்ஸ்மன் (Banking Ombudsman) அமைப்பில் புகார் கொடுக்கலாம். இந்த அமைப்பை தொடர்பு எண்கள் மற்றும் இ மெயில் ,நீங்கள் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

ஸ்டாப் லாஸ்

Image
ஸ்டாப் லாஸ் பங்கு வர்த்தகம் செய்யும் அனைவரும் பயன்படுத்தும் வார்த்தை ஸ்டாப் லாஸ் (Stop Loss). அப்படியென்றால் பங்கு வர்த்தகத்தில் முக்கியமான இடத்தை இந்த வார்த்தை பிடித்து இருக்கிறது என்று பொருள். நீங்கள் ஒரு பங்கை 100 ரூபாய் என்று வாங்குகிறீர்கள். அடுத்த இரண்டு தினங்களில் அந்த பங்கானது இரண்டு ரூபாய் குறைந்து 98 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகிறது. இன்னும் சில தினங்களில் அது மேலும் குறைந்து 95 ரூபாய் என்று வர்த்தகம் ஆகிறது. இது போன்ற நேரங்களில் ஒரு பங்கை வாங்கும் பொழுதே ஸ்டாப் லாஸ் செட் செய்து வைத்து விடுவார்கள். அதாவது வர்த்தகம் செய்யும் உங்களால் 5 ரூபாய் வரை இழப்பை தாங்க முடியும் என்றால் 95 ரூபாய்க்கு ஸ்டாப் லாஸ் செட் செய்து வைத்து விடுவார்கள். 100 ரூபாய் பங்கு 98 என்று ஆகும் பொழுது உங்கள் பங்கு விற்க பட மாட்டாது. அதுவே 95 என்று இறங்கியவுடன் விற்று விடும். சிறிதளவு நஷ்டம் ஏற்படும். மேலும் ஸ்டாப் லாஸ் என்பது உங்கள் வருமான திறன் மற்றும் பங்குச் சந்தையின் கணிப்பை வைத்து செயல்படுத்த வேண்டும்.

பேஸ் வேலுயு - முக மதிப்பு

Image
பேஸ் வேலுயு பேஸ் வேலுயு (Face Value) அதாவது முக மதிப்பு என்பது கம்பெனியின் நிலையான மதிப்பு. சந்தையில் பங்குகளின் விலை கூடினாலும் குறைந்தாலும் இந்த முக மதிப்பு மட்டும் மாறாது. ஒவ்வொரு காலாண்டும் கம்பெனி டிவிடென்ஸ் பணம் கொடுக்கும். அந்த டிவிடென்ட்ஸ் கணக்கு பண்ண இந்த முக மதிப்பு தேவைப்படும். டிவிடெண்ட் பற்றி நாம் அடுத்த பக்கத்தில் பார்க்கலாம்.

தனிநபர் கடன்

Image
தனிநபர் கடன் உங்களுடைய சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கும்பட்சத்தில், குறைவான வட்டியில் கடன் கிடைக்கும். ஆனால், புதிதாக கடன் வாங்க விண்ணப்பிக்கும் பொழுது அதிக வட்டியே பெரும்பாலும் வங்கிகள் வழங்குகிறது. தனி நபர் கடன் பார்க்க மிக எளிதாக தோன்றும். மாட்டிக் கொண்டால் மோசமான விளைவுகளை சில ஆண்டுகளில் கண் முன்னே கொண்டு வந்து விடும். ஏதேனும் ஒரு காரணத்தினால் உங்களுக்கு வர வேண்டிய பணம் வராமல் போக கடனை கட்ட முடியாத சூழ்நிலை உருவாகிறது. இது போன்ற நேரத்தில் அசல்கூட கட்ட முடியாமல் வட்டி இன்னும் எகிறி விட நிலைமை படு மோசமாகும். எப்படியோ உங்கள் கைகளுக்கு பணம் வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது நீங்கள் கடனை கட்டி முடிக்க சென்றால்,  ப்ரீ-குளோஸர் அபராத தொகையை சேர்த்து கட்ட வேண்டும். ப்ரீ அப்ரூவல் மூலமாக மிக குறுகிய நாட்களிலே கடன் கிடைத்துவிடும். அவசரப்பட்டு வாங்கி கைகளில் வைத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  மேலும் சில வங்கிகள் 12 - 18 மாதங்களுக்குப் பிறகு ப்ரீ-குளோசர் அபராதம் வசூலிப்பதில்லை. எனவே கடன் தேவைப்படும் சில நாட்கள் முன்பு நீங்கள் வாங்கினால் வட்டி செலவு குறையும். ...

ஹால்மார்க் முத்திரை - சிக்கல்கள்

Image
ஹால்மார்க் முத்திரை - சிக்கல்கள் தங்க நகை வாங்கும்போது ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்த்து விட்டு ஏமாற்றவில்லை என்றுதான் நினைக்கிறோம்.  ஆனால்,  கீழ் வரும் சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை விற்பனை செய்வதற்கு லைசென்ஸ் வாங்கியிருக்க வேண்டும் என்று நமது அனைவருக்கும் தெரிந்ததே. ஒரு நகை தயாரிப்பாளர்  நகையை செய்து முடித்த பின்  நகையின் தரத்தை உறுதி செய்வதற்காக ஹால்மார்க் சென்டருக்கு அனுப்பி வைக்கப்படும். சில சோதனைகள் செய்து முத்திரை இட்டு வாங்க வேண்டும் என்பது கட்டாயம். இதில் தங்கம் எத்தனை கேரட்டில் உள்ளது என்பதை தெரிவிக்க  கீழவரும் முத்திரைகள் இடப்படும். அதாவது 23 (958), 22 (916), 21 (875), 18 (750), 17 (708), 14 (585) மற்றும் 9 (375) காரட் நகைகளுக்கும் இந்த முத்திரை போடப்படும். நீங்கள் தங்கம் வாங்கும் பொழுது எந்த காரட்டுக்கான ஹால்மார்க் முத்திரை என்று பார்ப்பது அவசியம். இந்த ஹால்மார்க் முத்திரை போடுவதற்கு சில கட்டணம் வசூலிக்கிறார்கள். ஒரு நகைக்கு ரூ.25   முதல் ரூ.150 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது....

பி இ ஜி விகிதம்

Image
பி இ ஜி விகிதம்  இந்த கணக்கு ஒரு கணிப்பான கணக்கு, அதனால் முதலீடு ரிஸ்க் கண்டிப்பாக அதிகம் ஆக இருக்கும். அதாவது நீங்கள் ஒரு கணக்கு போட்டு வைத்து இருப்பீர்கள். அந்த கணக்கு படி நீங்கள் பங்கு வாங்குவீர்கள். உங்கள் கணக்கையும் தாண்டி கம்பெனியின் பங்குகள் சரி வர விலை ஏறவில்லை என்றால், உங்களுக்கு பெரும் நஷ்டம். உங்கள் கணிப்பு படி கம்பெனி விலை ஏறினால், உங்களுக்கு அதிகப்படியான லாபம். எதிர்காலத்தில் ஒரு கம்பெனி நன்றாக செயல்பட்டு அதன் EPS வருமானம் அதிமாகும் என்று ஒரு கணிப்பு வைத்து இருக்குறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.இப்பொழுது அதிகரித்த EPS அளவோடு கம்பெனியின் பி இ விகிதத்தை ஒப்பிட்டு , பி இ விகிதம் குறைவாக இருக்கும் பட்சத்தில், அந்த பங்கை வாங்கினால் லாபம் கிடைக்கும் வாய்ப்பு மிக அதிகம். பி இ ஜி விகிதம் = பி இ விகிதம் / இ பி எஸ் வளர்ச்சி விகிதம்  மேற்சொன்ன பார்மூலா வைத்து கணக்கீடும் பொழுது பி இ ஜி விகிதம் 1 ஐ  விடக் குறைவாக இருந்தால் , கம்பெனி நல்ல கம்பெனிதான். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக கம்பெனி விலை ஏறவில்லை , ஆனால் கண்டிப்பாக ஏறும்.எனவே பங்குகளை வாங்கி போடலாம். மே...

ரிட்டன் ஆன் நெட் ஒர்த்

Image
ரிட்டன் ஆன் நெட் ஒர்த் ஒரு கம்பெனி முதலீடு போட்டு அதிலிருந்து எவ்வளவு வருமானம் வருதுன்னு கணக்கு போட்டு பார்ப்பதுதான் இந்த ரிட்டன் ஆன் நெட் ஒர்த் ( Return on Net Worth). கம்பெனி வரி செலுத்திய பிறகு கிடைக்கும் லாபத்தை நிகர சொத்து மதிப்பால் வகுத்து கிடைப்பது வருமானம். இதை வைத்து கம்பெனி எந்த அளவுக்கு லாபம் சம்மதித்து இருக்குதுன்னு கண்டுபிடித்து விடலாம். இன்னும் தெளிவாக சொன்னால் , ஒரு கம்பெனியின் ரிட்டன் ஆன் நெட் ஒர்த் அதிகமாக இருக்க வேண்டும். இவை எல்லாம் நீங்கள் என்னவென்று தெரிந்தாலே போதுமானது. அந்த கணக்கு போடுவது எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பங்குச் சந்தையை பொறுத்தவரை இரண்டு விதமான அனாலிசிஸ் (Analysis) உண்டு. 1. பண்டமெண்டல் அனாலிசிஸ் (Fundamental Analysis) 2. டெக்னீகள் அனாலிசிஸ் (Technical Analysis) இந்த இரண்டு அனாலிசிஸ் செய்வதற்கு அடிப்படை விஷயங்கள் ஆன புக் வேலுயு , பி இ , இ பி எஸ் எல்லாம் தேவைப்படும். எனவே இவை எல்லாம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்.எப்படி கணக்கீடு செய்வது என்று தெரிந்து கொள்ள அவசியம் இல்லை.

தங்கம் டிசைன்

Image
தங்கம் டிசைன் ஒரு கடைக்கு சென்று தங்க நகை வாங்க செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஏதோ ஒரு நகை பிடித்துப் போக என்ன விலை என்று விசாரித்தால் நீங்கள் வாங்கும் தங்கத்தின் அளவை விட கூடுதலாக 1 அல்லது 2 கிராம் விலை சொல்லுவார்கள். ஏன் என்று கேட்டால் நகையில் வேலைப்பாடு அதிகம் என்று சொல்லி விடுவார்கள். வேறு வழியும் இல்லாமல் நீங்களும் வாங்கி விடுவீர்கள். செய்கூலி , சேதாரம் என்ற இரண்டு வார்த்தைகள்தான் இந்த நிறுவங்களின் ஆயுதம். இதை சொல்லியே நம்மிடமிருந்து பணத்தை வாங்கி விடுவார்கள். செய்கூலியை சரி என்று சகித்துக் கொண்டாலும் , சேதாரம் என்பதை எப்படி எடுத்துக் கொள்வது. சேதாரம் பற்றி விளக்கம் கேட்டால், அதை திரும்பப் பயன்படுத்த முடியாது என்று சொல்லி விடுவார்கள்.  பிறகு ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த நகையை அதே கடையில் மாற்றினாலும் சேதாரம் கழித்து விட்டுத்தான் எடுப்பார்கள். இது பழைய நகை என்று இன்னொன்றையும் சொல்வார்கள். பிறகு என்ன, கையில் கிடைக்காத சேதாரத்திற்கு இரண்டு முறை பணம் வீணாகி விட்டது. இதை எல்லாம் எப்படி லாபமாக மாற்றுவது என்று ஒரு பார்க்கலாம். வேலைப்பாடு இல்லாத அதிக எடை கொண்ட நகைகளை...

தங்க நகை சேமிப்புத் திட்டம்

Image
தங்க நகை சேமிப்புத் திட்டம் தங்க நகை சேமிப்புத் திட்டம் என்றால் என்னவென்று படித்து விட்டு , அதன் பிறகு தங்க நகை சேமிப்புத் திட்டம் லாபமா என்ற பக்கத்தையும் படித்து விடுங்கள். அப்பொழுதுதான் தெளிவாக புரியும். நமது ஊரில் சீட்டு கட்டுவது போல, மாத மாதம் ஒரு தொகையை நாம் கட்டி வர வேண்டும். குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக சில தொகையை நிர்ணயித்திருக்கிறார்கள். சில கடைகளில் அந்த எல்லையும் இல்லை. வாடிக்கையாளர்கள் அதில் முதலில் இணைவதற்கு சில கவர்ச்சிகரமான பொருட்கள் இலவசம் என்று அறிவிக்கிறார்கள். குறைந்தபட்ச காலம் 12 மாதங்கள் என்று நிர்ணயித்திருக்கிறார்கள். சில நிறுவனங்கள் ஒரு மாத தவணையை போனஸ் ஆக தருகிறார்கள். சில நிறுவனங்கள் செய்கூலி சேதாரம் கிடையாது என்று கூறுகிறார்கள். சில நிறுவனங்கள் 12 வது மாத தவணை தள்ளுபடி என்று தருகிறார்கள். நீங்கள் பணம் கட்ட கடைக்கு அலைய வேண்டியது இல்லை. மாத மாதம் வீட்டிற்கே வந்து வசூலித்து விடுகிறார்கள் அல்லது எக்ஸ் மூலம் நமது வங்கி கணக்கில் இருந்து எடுத்து விடுகிறார்கள். இல்லை என்றால், 2 , 3 மாதங்கள் சேர்த்து கட்ட சொல்கிறார்கள். 12 வது மாதம் பணம் சேர...

தங்க நகை சேமிப்புத் திட்டம் லாபமா?

Image
தங்க நகை சேமிப்புத் திட்டம் லாபமா? தங்க நகை சேமிப்புத் திட்டம் லாபமா? என்ற இந்த பக்கத்தை படிக்கும் முன்பு , தயவு செய்து தங்க நகை சேமிப்புத் திட்டம் பக்கத்தை படித்து விடவும். கீழே வரும் விவரங்களை மனதில் கொள்ள வேண்டும். 1. நீங்கள் உங்கள் தவணைகளைப் மாத மாதம் பணமாகச் செலுத்துகிறீர்கள். இறுதியில் நேரடியாக உங்கள் முதலீட்டைப் பணமாகத் திரும்பப் பெறமுடியாது 2. எந்தவொரு முதலீடாக இருந்தாலும் அரசோ அல்லது செபி அமைப்போ அல்லது ரிசர்வ் வங்கியின் தலையீடோ இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் அதுவெல்லாம் கிடையாது. 3. இது போன்று சில திட்டங்கள் நடத்தி கடை மூடப்பட்ட நிறுவனங்களும் உண்டு. 4. தவணை முடியும் தேதியில் தங்கம் விலை குறைவாக இருந்தால் மட்டுமே லாபம் சாத்தியம். இல்லையெனில் லாபம் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. 5. நாம் எந்த ஒரு பொருளையும் வாங்கி விட்டுத்தான் தவணை செலுத்துவோம். இங்கு அதற்கு அப்படியே தலை கீழாய் நடக்கும். 6. நல்ல வேலைப்பாடு உள்ள நகை வாங்க அனுமதி உண்டா என்று தெளிவான விதி முறை அறிதல் அவசியம். 7. தங்க நாணயமாகவோ அல்லது கட்டியாகவோ வாங்க அனுமதி இருக்கிறதா என்று அறிதல் அவசிய...

பழைய நகையை மாற்றலாமா?

Image
பழைய நகையை மாற்றலாமா? தங்க நகை வாங்கும் சில பேர் 2 அல்லது 3 ஆண்டுக்குள் பழைய நகையை மாற்றி விட்டு மீண்டும் புது நகை வாங்க முயற்சி செய்கிறார்கள். இப்படி பழைய நகையை மாற்றும் பொழுது என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனித்தால் அடுத்த முறை மாற்றுவதற்கு சற்று சிந்தனை செய்வீர்கள். பழைய நகை விற்கும் பொழுது கழிவு என சுமார் 3 முதல் 5 % வரை கழிவு என எடுத்து விடுவார்கள். இந்த பழைய நகை வாங்கும் பொழுதே சேதாரம் 10 முதல் 20% வரை செலவு செய்து இருப்போம் இப்படி பழைய நகை மாற்றும் பொழுது நமது லாபமானது கொஞ்சம் குறைகிறது. இப்பொழுது பழைய நகை விற்று  கிடைக்கும் பணத்தில் புது நகை வாங்கும் போது அதற்கும் சேதாரம் செலவழிக்க வேண்டியது இருக்கிறது. எனவே முதல் முறை நகை வாங்கும் பொழுதே சேதாரம் கழிவு எல்லாவற்றையும் மனதில் வைத்து கொண்டு உங்களுக்கு பிடித்த நகையை வாங்குவது நலம்.

செல்வ மகள் சேமிப்பு திட்டம் - விரிவான அலசல்

Image
செல்வ மகள் சேமிப்பு திட்டம் - விரிவான அலசல் இதில் செய்யும் முதலீடை வருமான வரி விலக்கு 80 சியின் கீழ் காட்டி பயன் பெறலாம். இந்த திட்டம் ஆரம்பித்த பிறகு, இணைய தளம்  மூலமாகவும் பணம் செலுத்தலாம். வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 10-ம் தேதிக்குள் தவணையை முதலீடு செய்யும் பட்சத்தில் வட்டி குறையாது. தவறினால் அந்த மாதத்திற்குரிய வட்டி குறைந்து விடும். குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யும் உண்டு.  இதை தாண்டி செலுத்தும் பட்சத்தில்  டெபாசிட் செய்யும் தொகைக்கு வட்டி கிடையாது. கூடுதலாக டெபாசிட் செய்த தொகையை எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெறலாம். அதனால் கூடுதல் தொகை செலுத்தும் எண்ணம் இருந்தால் வேறு ஏதேனும் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். தவணையை சரியாகச் செலுத்தவில்லை எனில் 15 வருடங்கள் கழித்து வரும் தபால் நிலையத்தின் இயல்பான வட்டியான வருடத்திற்கு 4 சதவீதமாக மட்டுமே பெற இயலும். எனவே கவனமாக முதலீடு செய்து தவறாமல் கவனித்து வரவும். ஏதேனும் காரணமாக கணக்கு இடை நிறுத்தப்பட்டால் 50 ரூபாயினை அபராதம் செலுத்தி விடுப்பட்ட க...

செல்வ மகள் சேமிப்பு திட்டம்

Image
செல்வ மகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்கு என்று மத்திய அரசால் பிரத்யோகமாக  கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் (Sukanya Samruddhi Yojana) . இந்த திட்டம் தமிழில் செல்வ மகள் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக பெற்றோர் அல்லது அவர்களது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் பொதுத்துறை வங்கிகளிலும் ஆரம்பிக்கலாம். பாரத பிரதமர் மோடி அவர்களது அரசு இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தது. ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும். இந்த திட்டம் ஆரம்பிக்கும் பொழுது இதற்கான வட்டி விகிதம் அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து தற்பொழுது 8.1 சதவித வட்டி விகிதம் லாபம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.  இத்திட்டம் அறிமுகமான புதிதில் அதிகபட்ச முதலீடு 14 வருடங்கள் என்று இருந்தது.

PPF - பொது ப்ரொவிடண்ட் பண்டு

Image
 PPF - பொது ப்ரொவிடண்ட் பண்டு நமது அரசாங்கத்தின் நல்லதொரு சிறந்த முதலீடு திட்டம் பொது ப்ரொவிடண்ட் பண்ட ( Public Provident Fund ). இந்த திட்டம் ஆரம்பிப்பதற்கு தனிப்பட்ட தகுதி என்று எதுவும் தேவை இல்லை. மாத சம்பளம் வாங்குபவர்கள் ஆனாலும் சரி அல்லது சுய தொழில் செய்பவர்கள் ஆனாலும் சரி,  வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தை நீங்கள் பொதுத்துறை வங்கிகளிலோ அல்லது தபால் நிலையங்களிலோ ஆரம்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு 8% வட்டி கிடைக்கும். இந்த வட்டி நிலையாக இல்லாமல் மாறும் தன்மை உடையது. இதில் முதலீடு செய்யும் பணத்தை 15 வருடங்களுக்கு முன்னாள் எடுக்க முடியாது. ஆனால் விருப்பப்பட்டால் 6 வருடம் கழித்து முதலீட்டின் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளலாம். மேலும் கடன் தேவைப்படும் பட்சத்தில் இதன் மூலமாக கடனும் பெற்றுக் கொள்ளலாம். இதில் செய்யும் முதலீடை வருமான வரி விலக்கு 80 சியின் கீழ் காட்டி பயன் பெறலாம்

புக் வேலுயு

Image
புக் வேலுயு இந்த புக் வேலுயுவை நிகர சொத்து என்றும் சொல்வார்கள். நிகர சொத்து என்றவுடன் சிலருக்கு  புரிந்து இருக்கும். மேற்கொண்டு விரிவாக பார்ப்போம். நீங்கள் ஒரு பழைய கம்பனியை விலைக்கு வாங்க போகுறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கண்ணை மூடிக் கொண்டு ஒரு விலை சொன்னவுடன் வாங்கி விடுவீர்களா ? மாட்டீர்கள் அல்லவா ? அந்த கம்பெனியின் இயந்திரங்கள் , அப்படி இப்படி என்று எல்லாவற்றையும் பார்ப்பீர்கள் அல்லவா. தேய்மானம் எல்லாம் பார்த்து விட்டுத்தான் ஒரு விலை சொல்வீர்கள். அந்த விலைதான் புக் வேலுயு என்று சொல்கிறார்கள். இப்பொழுது உங்கள் மனதில் ஒரு விஷயம் சட்டென்று தோன்றி இருக்கும். அதாவது புக் வேலுயு அதிகமாக இருந்தால் நல்ல கம்பெனி என்றும் குறைவாக இருந்தால் நல்ல கம்பெனி அல்ல என்றும் முடிவு செய்து இருப்பீர்கள். உங்கள் எண்ணம் கொஞ்சம் சரியானதுதான். ஆனால் இன்னும் பல விஷயங்கள் ஆராய்ந்து  பார்க்க வேண்டி இருக்கிறது. அதன் பிறகு முடிவெடுக்கலாம்.

பி இ விகிதம்

Image
பி இ விகிதம் இ பி எஸ் போலவே பங்குச் சந்தையில் பயன்படுத்தும் ஒரு முக்கியமான வார்த்தை  பி இ விகிதம் ( PE Ratio). ஒரு பங்கோட சந்தை விலைக்கும் அந்த பங்கோட EPS கும் உள்ள விகிதம்தான் பி இ ரேஷியோ (Price to Earnings Ratio ) என்பது. உதாரணமாக ஒரு கம்பெனியின் பங்கு 200 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகுது என்று வைத்துக் கொள்வோம். மேலும் அந்த கம்பெனியின் EPS 15 ரூபாய் என்று வைத்துக் கொண்டால், அந்த பங்கின் பி இ விகிதம் ஆனது 200/15 =>13. பி.இ. அதிகமா இருந்தால் அந்தப் பங்கு அதிக விலைக்கு வியாபாரம் ஆகிக் கொண்டு இருக்கிறது என்று பொருள் . பி.இ. குறைவா இருந்தால் குறைந்த  விலைக்கு வியாபாரம் ஆகிக் கொண்டு இருக்கிறது என்று பொருள். அதிக விலைன்னா வாங்காமல் இருப்பது நல்லது . குறைவா இருந்தால் வாங்குவது நல்லது. இதையும் தாண்டி சில விதிகள் இருக்கிறது. மேற்கொண்டு ஆராய்ந்த பின் வாங்க வேண்டும். மேற்கொண்டு ஆராய்வது எப்படி என்பது மெதுவாய் புரிந்து கொள்ளலாம். அதிக விலைன்னா வாங்காமல் இருப்பது நல்லது . குறைவா இருந்தால் வாங்குவது நல்லது அதிக விலைன்னா வாங்காமல் இருப்பது நல்லது . குறைவா இருந்தால் வாங்...

தபால் அலுவலக டைம் டெபாசிட்

Image
தபால் அலுவலக டைம் டெபாசிட் தபால் அலுவலகத்தின் பல சேமிப்புத் திட்டத்தில் ஒன்றுதான் தபால் அலுவலக டைம் டெபாசிட்(). பிக்சட் டெபாசிட் போன்றுதான் இதுவும். இந்த திட்டத்தில் குறைந்த பட்ச முதலீடாக 200 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக பட்ச முதலீடு உங்கள் மன விருப்பம் போல. (எல்லை இல்லை ). இதில் 5 ஆண்டு கால அளவிற்குத்தான் வரிச்சலுகை கொடுக்கிறார்கள். மேலும் இதில் முதலீடு செய்யும் முன் வங்கி பிக்சட் டெபாசிட் பற்றியும் விசாரித்து முடிவு எடுக்கலாம். இது போன்ற திட்டம் பொது துறை வங்கிகளிலும் நடை முறையில் இருப்பதால் நன்று விசாரித்து முடிவெடுத்தல் நலம்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

Image
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் தபால் அலுவலகத்தில் மூத்த குடிமக்களுக்கனா ஒரு திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme)  60 வயதான மூத்த குடிமக்களுக்கான திட்டம் இது. 55 முதல் 60 வயதை நெருக்கும் சில பேர் விருப்ப ஓய்வு ( வி ஆர் எஸ்) வாங்கி இருந்தால் அவர்களும் இந்த திட்டத்தில் சேரலாம். குறைந்த பட்ச முதலீடாக ஒரு வருடத்தில் 1000 ரூபாய் செலுத்த வேண்டும். அதிக பட்ச முதலீடாக 15 இலட்சம் வரை செலுத்த முடியும். ஆனால், 1 லட்சம் வரைதான் வருமான வரி விலக்கு பெற முடியும். இதில் வட்டி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி பிடித்தம் உண்டு. மேலும் இது பற்றிய தகவல்களை தபால் நிலையம் சென்று விசாரித்து கொள்ளலாம்.

என் எ வி - NAV

Image
என் எ வி - NAV மியூச்சுவல் பண்டு பற்றி பேசும் பொழுது என் எ வி (NAV) என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துவார்கள். உதாரணமாக, ஷேர் மார்க்கெட்டில் , நீங்கள் TCS பங்கு 100 வாங்கி வைத்து இருக்குறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் நண்பர் ஒருவர் உங்களிடம் நீங்கள் TCS எத்தனை பங்கு வாங்குனீர்கள் என்று கேட்கிறார். நீங்கள் 100 பங்கு என்று சொல்வீர்கள் அல்லவா. இதே போல் மியூச்சுவல் பண்டில் நீங்கள் ஒரு 10 வாங்குனீர்கள் என்றால், 10 NAV என்று சொல்வார்கள். அதாவது ஒரு NAV எத்தனை ரூபாய் மதிப்பு. அவ்வளவுதான். உதாரணமாக, 1000 ரூபாய் கொண்டு 10 ரூபாய் முக மதிப்பு ( முக மதிப்பு என்னவென்று பங்குச் சந்தை பக்கத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் ) உள்ள பண்டு வாங்குகிறீர்கள் என்றால், உங்களுக்கு 100 NAV  யூனிட் கிடைத்து இருக்கும்.

பண்டு மனேஜர்ஸ்

Image
Mutual Fund Manger in Tamil உங்களுக்கு பங்குச் சந்தை பற்றிய அறிவு இல்லை என்றால் , உங்களால் எப்படி முதலீடு செய்ய முடியும்? இது போன்ற நேரத்தில் நமக்கு கை கொடுப்பதுதான் மியூச்சுவல் பண்டு என்று பார்த்தோம். சரி , இந்த மியூச்சுவல் பண்டு சரியான முறையில் வழி நடத்த ஒருவர் வேண்டும் அல்லவா ? அவர்தான் பண்டு மனேஜர். நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை எந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று இவர்கள்தான் முடிவு செய்வார்கள். எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் மியூச்சுவல் பண்டு திட்டத்தின்  பண்டு மனேஜர் யார் ? அவர் இன்னும் எத்தனை திட்டங்கள் நடத்தி வருகிறார். இதற்கு முன் அல்லது இப்பொழுது நடத்தி வரும் திட்டங்கள் எல்லாம் லாப பாதை நோக்கி செல்கிறதா? என்று எல்லா விஷயங்களையும் கவனிக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் பண்டு மனேஜர்  முழுத் தகவலும் வேண்டும். இது போன்ற தகவலை இணையதளத்தில் இருந்து மிக எளிமையாக எடுத்து விடலாம். முதலீடு செய்யுங்கள், பண்டு மனேஜர் யார் என்னவென்று முழு விபரமும் தெரிந்த பின் முதலீடு செய்யுங்கள். ஒரு திட்டத்தில் முதலீடு செய்து விட்டால் அதோடு நிம்மதி பெருமூச்சு...

பிக்சட் டெபாசிட் - சிறு உதாரணம்

Image
பிக்சட் டெபாசிட் - சிறு உதாரணம் ஒரு வங்கியானது பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 வருடம் முதலீடு செய்யும் போது 6.5 சதவீத வட்டி விகித லாபத்தினை கொடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது நீங்கள் அதில் 1.50 லட்சம் ரூபாயினை 10 வருடத்திற்கு முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.  10 வருடம் கழித்து நீங்கள் முதலீடு செய்த தொகையானது சராசரியாக  2.85 லட்ச ரூபாயாகத் திரும்பக் கிடைக்கும். இதே முதலீடே நீங்கள் 5 வருடத்திற்கு முதலீடு செய்திருந்தால் சராசரியாக 2.14 லட்ச ரூபாயாகக் திரும்ப கிடைத்திருக்கும். வருமான வரி விலக்கு 80 சியின் கீழ் பயனும் பெற்றுக் கொள்ளலாம். இப்பொழுது மீண்டும் அந்த முதிர்வு தொகையினை மறு முதலீடு செய்யும் போது அதே வட்டி விகிதம் வங்கி கொடுக்கிறது என்று கணக்கு வைத்துக் கொண்டால் 10 வருடத்தில் சுமார் 3.07 லட்ச ரூபாயாக லாபம் கிடைக்கும். இதனால்தான் பிக்சட் டெபாசிட் குறைந்த கால முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிறது என்று நிதி ஆலோசகர்கள் சொல்கிறார்கள்.

பிக்சட் டெபாசிட்

Image
பிக்சட் டெபாசிட் ஜீரோ ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்கள் இதில் முதலீடு செய்து வருமானம் பெறலாம். குறைந்த அளவு லாபமே என்றாலும் மிகவும் பாதுகாப்பானது. அதனால்தான் ஜீரோ ரிஸ்க் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் என்று கணக்கிடுகிறமோ அந்த லாபம் முழுமையாக கிடைத்து விடும் என்பது இதன் சிறப்பு. நீங்கள் 5 வருடம் முதலீடு செய்யும் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு அரசு 80 சி மூலமாக 1.50 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கிறது. இருந்தாலும் 80 சியின் கீழ் வருமான வரி விலக்கு பெற இதை விட பல சிறந்த திட்டங்கள் இருப்பதால் சற்று யோசிப்பது கூட நல்லது. இதன் வட்டி விகிதங்கள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். அதிக பட்சமாக 8.5 % வரை கிடைக்கும். நினைவில் கொள்ளவும், இது அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். எனவே முதலீடு செய்யும் முன் தெளிவாக விசாரித்து அறிந்து கொள்ளுதல் நன்று. பிக்சட் டெபாசிடில் முதலீடு செய்யும் பொழுது குறைந்த காலத்திற்கு அதிக லாபம் என்றும், நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது லாபம் குறையும் என்றும் நிதி ஆலோசர்கள் சொல்வது உண்டு. அது ஏன் என்று விளக்க...

மனை தேர்ந்தெடுத்தல்

Image
மனை தேர்ந்தெடுத்தல் நிலத்தில் முதலீடு செய்வது நல்ல முதலீடு என்று முடிவெடுத்த பிறகு ஒரு மனையை எப்படி தேர்ந்தெடுப்பது என்று பார்ப்போம். 1. மழை நேரத்தில் சேறு, சாக்கடை என்று அசுத்தமாக இல்லாமல் நீர் வடிந்து செல்லுதல் போன்ற அமைப்பு இருக்க வேண்டும். இல்லையென்றால் நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட நிலமாகவாவது இருக்க வேண்டும். 2. பஞ்சாயத்து குடிநீரோ, மெட்ரோ குடிநீரோ விண்ணப்பித்தால் உடனே கிடைக்குமா ? அல்லது ஏற்கனவே அந்த பகுதியில் இருக்கிறதா ? என்றும் பார்க்க வேண்டும். 3. மின்சார வசதி , கழிவு நீர் வசதி சரியான முறையில் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். 4. மளிகை பொருட்கள் வாங்குவதற்கு கடைகள் அருகிலேயே இருக்கிறதா மற்றும் பள்ளிக்கூடம் நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். 5. பேருந்து , ரயில் நிலையம் என்று அருகில் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். 6. அவசரத் தேவைக்கு மருத்துவமனை அருகிலேயே இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். 7. பணத் தேவைக்கு வங்கி அல்லது ATM அருகிலேயே இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். இவை எல்லாம் அருகில் இருந்தால் விலை சற்று கூடுதலாகவ...

ரிவர்ஸ் மார்ட்கேஜ்

Image
ரிவர்ஸ் மார்ட்கஜ்  ரிவர்ஸ் மார்ட்கேஜ் வயதானவர்களுக்கு ஒரு நல்ல பயனுள்ள தேர்வு. ஒரு சிறு உதாரணம் பார்த்து தெளிவு பெறலாம். வயதான தாய் தந்தையரை அவர்களது பிள்ளைகள் கவனிக்கவில்லை அல்லது கைவிட்டு விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவர்கள் வசிக்கும் வீடு அவர்களது பெயரில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது போன்ற இக்கட்டான நேரத்தில் அந்த வீடு அவர்களை காப்பாற்றும். எப்படி என்றால் , இவர்கள் வீட்டை வங்கியில் அடமானம் வைத்தால், வங்கியானது வீட்டின் மதிப்பைக்  கணக்கிட்டு 15 முதல் 20 வருடம் வரை மாதம் ஒரு தொகையை அந்த வீட்டின் உரிமையாளரான அந்த வயதானவர்களுக்கு கொடுக்கும். அந்த குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன், வங்கியானது தொகை அளிக்காது. ஆனால் , அவர்களது காலம் முடியும் வரை அந்த வீட்டில் அவர்கள் வசித்துக் கொள்ளலாம். இவர்கள் இரண்டு பேருடைய மறைவுக்குப் பிறகு, கொடுக்கப்பட்ட தொகை , வட்டி என்று எல்லாவற்றையும் வங்கி கணக்கு போடும். பிறகு வங்கியானது அந்த வீட்டை விற்று, வங்கிக்குரிய தொகையை எடுத்துக் கொண்டு மீதி தொகையை அவர்களது வாரிசுக்கு கொடுத்து விடும். அவர்களது வாரிசு விரும்பினால் ...

கார்னர் பிளாட்

Image
கார்னர் பிளாட் நிலத்தில் முதலீடு செய்ய விரும்பினால், முடிந்த வரை கார்னர் (முனை ) பிளாட் வாங்க முயற்சி செய்யுங்கள். அப்படி என்ன கார்னர் பிளாட்டின் சிறப்பு என்று கேட்கிறீர்களா ? நீங்கள் நிலம் வாங்கும் பொழுது நிலத்து உரிமையாளரிடமோ அல்லது ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமோ பேசினால் அவர்கள் கார்னர் பிளாட் என்றால் ஒரு சதுர அடிக்கு வழக்கமான மதிப்பை விட சற்று கூடுதல் சொல்வார்கள். ஏன் என்றால் கார்னர் பிளாட் வைத்து கூடுதல் பலன்கள். அதனால் கூடுதல் லாபம். 1. கார்னர் பிளாட் சுற்றி எப்பொழுதும் சிறந்த காற்றோட்டம் இருக்கும்.  அருகிலே பிற வீடுகள் நெருக்கமாக இருந்தாலும் இது சாத்தியமே. 2. கடைகள் அமைத்து வாடகை விடுவதற்கு வசதியாக இருக்கும். இதன் மூலம் உங்கள் வருமானம் சற்று கூடுதல் கிடைக்கும். 3. இரண்டு தெரு முனைகளை பயன்படுத்த வசதியாக இருக்கும். 4. வாகனங்கள் பார்க்கிங் நிறுத்தி எடுப்பதற்கு எளிமையாக இருக்கும். அதாவது ஒரு வழியாக நுழைந்து இன்னொரு வழியாக வெளி வருவது. 5. வீடு வாசலை உங்கள் விருப்பப்படி வாஸ்து சாஸ்திரம் பார்த்து வைக்க சௌகரியமாக  இருக்கும்.

அட்சய திருதியை

Image
அட்சய திருதியை உண்மையிலே அட்சய திருதியை  அன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகுமா? என்று கேட்டு அதற்கு விளக்கம் தருவதற்கான பக்கம் இது அல்ல. அதை பற்றி இன்னொரு பக்கத்தில் தெளிவாக காணலாம். அட்சய திருதியை நாளில் தங்க நகைக்க கடைகளில் கூட்டம் கூடுவது மிக இயல்பான ஒன்றுதான். ஆனால் இது போன்ற நேரத்தில் தான் , நீங்கள் வாங்கும் தரம் ஹால்மார்க் முத்திரை என்று எல்லாவற்றையும் கண்டிப்பாக தெரிந்து வாங்க வேண்டும். தங்கம் ஒரு நல்ல முதலீடுதான், அதில் சந்தேகம் இல்லை. ஆனால் , முதலீடு என்று வரும் பொழுது குறைவான பணம் முதலீடு செய்து அதிக படியான வருமானம் கிடைப்பது தானே உண்மையான முதலீடு. ஆனால் அட்சய திருதியை அன்று தங்க விலை உயர்வாகவே இருக்கும். இதை பலரும் அறிவதில்லை. அட்சய திருதியை முடிந்து அடுத்த சில நாள்களிலோ அல்லது சில வாரங்களிலோ தங்க விலை குறைந்து விடும். ஆதலால் , முதலீடாக வாங்க நினைத்தால் இது போன்ற நாட்களில் வாங்குவது புத்திசாலித்தனம். உங்கள் பணமும் பெருகும்.

முக்கிய வார்த்தைகள் - ஈ பி எஸ் - EPS

Image
ஈ பி எஸ் - EPS பங்குச் சந்தை பற்றி ஒருவர் பேசும் பொழுது என்ன பேசுகிறார் என்று புரிய சில வார்த்தைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் என்ன பேசுகிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடியும். அப்படி சில முக்கியமான வார்த்தைகளைத்தான் பார்க்க போகிறோம். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் இங்கே சில பார்முலாக்கள் (சூத்திரங்கள் ) பார்க்க போகிறோம். அது எல்லாம் சற்று தெரிந்து கொள்ள மட்டும் தான். அதனால் அதை நினைத்து பயப்பட தேவை இல்லை. ஈ பி எஸ் - EPS ( Earning Per Share) : ஒரு குறிப்பிட்ட காலத்துல அந்த கம்பெனியோட ஒரு பங்குக்கு  எவ்வளவு வருமானம் தந்து இருக்கிறது என்பதுதான் இதன் பொருள். இதை கணக்கிட ஒரு பார்முலா(சூத்திரம்) உதவுகிறது. பார்முலா = கம்பெனி நிகர லாபம் / கம்பெனி மொத்த பங்கு இந்த EPS மதிப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில், அந்த கம்பெனியின் பங்குகளை வாங்கலாம். ஆனால் , பங்கு வாங்க இந்த ஒன்று மட்டுமே போதுமானது அல்ல. நினைவில் கொள்ளுங்கள், சில நேரங்களில் EPS மதிப்பு நன்றாக இருந்தும் , பங்கு சரியான லாபம் கொடுக்காது. அது ஏன் என்று போக போக புரியும். அதே சமயம் , EPS மதிப்பு நன்றா...

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை

Image
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை நாம் அடிக்கடி செய்திகளில் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை என்ற இரண்டு வார்த்தைகளையும் கேட்டு இருப்போம். நமது நாட்டைப் பொறுத்தவரை இந்த இரண்டு சந்தைகள்தான் முக்கியமானவை. இது தவிர இன்னும் சில இருந்தாலும் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைதான் முக்கியமானவை. இந்த இரண்டிலும்தான் பெரும்பாலான கம்பெனிகள் அதன் பங்குகளை வெளியிட்டு இருக்கும். திங்கள் முதல்  வெள்ளிக்கிழமை வரை காலை 9:15 முதல் மாலை 3:30 வரை வர்த்தகம் நடக்கும். இந்த நேரத்தில்தான் பங்குகளை வாங்குவதும் விற்பதும், உங்களது டீமேட் அக்கவுண்ட் மூலமாக நடக்கும்.

செபி

Image
செபி  பங்குச் சந்தை முதலீடு முறைகள் இந்த செபி - SEBI (Securities and Exchange Board of India) அமைப்பின் மூலமாகவே கண்காணிக்கப்படும்.  மேலும் முதலீட்டார்களுக்கும் தக்க பாதுகாப்பு அளிக்கிறது. முதலீட்டார்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் செபி அமைப்பை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். மியூச்சுவல் பண்டு சம்பந்தமான பிரச்சினைகளும் இதன் மூலம் தீர்த்து வைக்கப்படும். சென்னையிலும் இதற்கென்று கிளை உள்ளது. இதன் தொடர்பு முகவரியை இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

டிரேடிங் டீமேட் கணக்கு

Image
டிரேடிங்  டீமேட் கணக்கு  பங்கு வர்த்தகத்தில் ஈடுபட இந்த டீமேட் அக்கௌன்ட் திறக்க வேண்டும் என்பது கட்டாயம். இது நமது வங்கி கணக்கு போலவே. நாம் வாங்கி விற்கும் பங்கு கணக்குகள் இங்கு டிஜிட்டல் முறையில் இருக்கும். இதில் சிறப்பான பல வசதிகள் உண்டு. இது நமது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். எனவே, டிவிடெண்ட் கிடைக்கும் பொழுது நமது வங்கி கணக்கிற்கே வந்து விடும். இப்பொழுது பெரும்பாலான வங்கிகளே இந்த டீமேட் வசதியை வழங்குகிறது. இது போக , ஜீரோதா , சேர்கான் போன்றவர்களும் இதை வழங்குகிறர்கள். டீமேட்  மற்றும்  டிரேடிங் வித்தியாசம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். டீமேட் என்பது வங்கி அக்கவுண்ட்  போலவே ஒரு அக்கவுண்ட். டிரேடிங் என்பது , டீமேட் அக்கவுண்ட்டை வைத்து  நீங்கள் அங்கு செய்யும் வர்த்தகம். இந்த டிரேடிங் செய்யத்தான் நம்மிடமிருந்து கொஞ்சம் கமிஷன் புரோக்கர்களுக்கு செல்கிறது. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, பங்கு வாங்கி விற்கும் பொழுது புரோக்கர்களுக்கு சில கமிஷன் செல்லும். அதை யார் குறைவாக வழங்குகிறார்கள் என்று பார்த்து வாங்க வேண்டும். இது போக நம...

நாமினி அவசியம்

Image
மியூச்சுவல் ஃபண்ட் நாமினி எந்த ஒரு முதலீடு தொடங்கினாலும் அதில் நாமினி பெயர்  என்று கட்டாயம் ஒரு காலம் இருக்கும். ஆனால் பெரும்பாலான நபர்கள் நாமினி யின் பெயர் குறிப்பிட மறந்து விடுகிறார்கள் அல்லது இதற்கெல்லாம் நாமினி குறிப்பிட வேண்டுமா என்று அலட்சியமாக விட்டு விடுகிறார்கள். இவ்வாறு நாமினி குறிப்பிடாமல் விடுவது மிகப் பெரும் தவறு. எல்லா நாளும் எல்லா நேரமும் எல்லார்க்கும் சரியாக இருப்பதில்லை. ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டால், முதலீட்டின் வருமானம் நாமினிக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் வந்து சேர நாமினியின் பெயர் குறிப்பிடுதல் மிக அவசியம். நீங்கள் நாமினியாக குறிப்பிடும் நபர் உங்கள் துணையாகவோ, குழந்தைகள் (மைனர் எனில், பாதுகாவலர் பெயர் தேவைப்படும்), மற்றொரு குடும்ப உறுப்பினர், நண்பர் அல்லது நீங்கள் நம்பும் வேறு எந்த நபராகவும்  என்று எந்த உறவிலும் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் நாமினியை மாற்றிக் கொள்ள விரும்பினால், மாற்றிக் கொள்ளலாம். மேலும் ரத்து செய்ய விரும்பினாலும் செய்யலாம்.

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு தேர்வு செய்வது

Image
இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு  தேர்வு செய்வது சென்ற பக்கத்தில் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு  விஷயங்கள் பார்த்தோம். இந்த பக்கத்தில் சரியான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு தேர்வு செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம். நான் எத்தனை இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு வாங்குவது என்ற ஒரு குழப்பமும் வரும். ஒன்று அல்லது இரண்டு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் முதலீடு செய்வது போதுமானது. அதில் ஒன்று லார்ஜ்கேப் ஃபண்டாக இருக்கவேண்டும். ஏன் லார்ஜ்கேப் ஃபண்டாக இருக்க வேண்டும் என்று கேட்டால்,  லார்ஜ்கேப் இந்தியாவில் இருக்கும் டாப் 100 கம்பெனிகளில் முதலீடு செய்யும். அதனால் அவ்வளவு எளிதாக நஷ்டம் வராது. ரிஸ்கும் சற்று குறைவு. அடுத்ததாக, மிட் அண்டு ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவேண்டும். இவை லார்ஜ்கேப் ஃபண்டுகளைவிட அதிக அளவில் வருமானம் கொடுக்கும் வாய்ப்புகள் சற்று அதிகம். அதே வேளையில் இவற்றில் ரிஸ்க்கும் சிறிது அதிகமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும், முதலீடு செய்வதற்குமுன் நீங்கள் தேர்ந்தெடுக்க போகும் பண்டின் கடந்தகால செயல்பாடுகளை தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். குறைந்தது 3 முதல் 5 ஆண்டு கால வரையிலான ஆராய்ச்சி அ...

வரி சேமிப்பு இ.எல்.எஸ்.எஸ் பண்டு

Image
 இ.எல்.எஸ்.எஸ் பண்டு மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்து வருமான வரி சேமிக்க முடியுமா? என்ற சிந்தனை வருகிறதா . சரி அப்படியென்றால் நீங்கள் தேர்ந்து எடுக்க வேண்டியது இ.எல்.எஸ்.எஸ் (ELSS) ஃபண்ட் முதலீடு. இதில் 11%  முதல் 16% வரை வருமானம் வரும் வாய்ப்புகள் மிக அதிகம். சில நேரங்களில் இது அதையும் தாண்டி அதாவது 19% வரை கொடுக்கும் திறன் உடையது மற்றும் ஐந்தாண்டு காலத்தில் 17% வருமானம் வரை கொடுக்கும் வாய்ப்புகளும் அதிகம். ஆனால், இந்த அளவு  வருமானம் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. முன்பே சொன்னது போல,  பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து வருமானம் இருக்கக்கூடும் என்பதை எப்பொழுதும் முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ரிஸ்க் எடுக்காமல் எதுவும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் மியூச்சுவல் பண்டுகள் நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தையே கொடுக்கும்.  நீங்கள் நல்ல பண்டை தேர்ந்து எடுத்து இருந்தால். கடந்த பட்ஜெட்டை நினைவுபடுத்தி பாருங்கள். ரூ.1 லட்சத்துக்கு மேல் உள்ள லாபத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி 10% செலுத்த வேண்டும். 18.5% வரை வருமானம் கிடைக்கும்ப...

கிரெடிட் கார்டு கடன் மீளும் வழி

Image
கிரெடிட் கார்டு கடன் மீளும் வழி உங்கள் வருமானத்தின் பலம் உங்களுக்குத் தெரியும். அதனால் நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான தொகையைக் கண்டிப்பாக செலுத்த முடியுமா அல்லது முடியாதா? என்று உங்களுக்குத் தெளிவாக தெரியும். இது போன்ற சமயத்தில் புத்திசாலித்தனமாக முடிவெடுங்கள். ஏதோ ஒரு வழியில் உங்கள் கிரெடிட் கார்டு கடன் அதிகமாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்தக் கடனைத் திரும்ப அடைக்க முடியாமல் தடுமாறுகிறீர்கள் என்றால்,  கடன் தந்த நிறுவனத்திடம் சற்று அமைதியாக பேசி பர்சனல் லோனாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதன் மூலமாக உங்கள் வட்டி குறையும். அதாவது, கிரெடிட் கார்டு கடனுக்கு 36% வட்டி எனில், பர்சனல் லோனுக்கு 13% முதல் 20% வரை வட்டி விதிக்க வாய்ப்புண்டு.  எனவே உங்கள் வட்டிச் சுமை குறைவதுடன், திரும்பச் செலுத்தவேண்டிய தொகையை மாதத் தவணையாகவும்(இஎம்ஐ) மாற்றி தருவார்கள். சில நேரங்களில் உங்களுக்கு ஏதோ ஒரு வழியில் பணம் அதிகமாக வந்தால் மொத்த கடனையும் கட்டிவிட நினைக்கும் பொழுது,  ஒரு குறிப்பிட்ட தொகையை  அபராதமாக நிறுவனங்கள்  வசூலிக்கும். இந்த தொகை எவ்வளவு...

கிரெடிட் கார்டு கடன்

Image
கிரெடிட் கார்டு கடன் எதற்கெடுத்தாலும் ஷாப்பிங், எனக்கென்ன கவலை ? நான்தான் கிரெடிட் கார்டு வைத்து இருக்கேன் என்று சொல்லி கொண்டு கார்டை போட்டு தேய்த்து அதற்குரிய பணத்தை சரியாக செலுத்தினால் பாதிப்பு இல்லை. தவறினால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கிரெடிட் கார்டு கடனில் பெரும்பாலும் நடுததர வசதி நபர்களே மாட்டித் தவிக்கிறார்கள். ரூ.25,000-க்கு மேல் சம்பளம் வாங்கினால் போதும்.  கிரெடிட் கார்டு ரெடி. இதில் தான் பாதி பேர் மாட்டிக் கொள்கிறார்கள். இது ஏதோ எளிது என்று சொல்லி முழுமையாக தெளிவு இல்லாமல் வாங்கிக் கொள்பவர்கள் பல பேர். ஒரு கசப்பான உண்மை தெரியுமா ? இருப்பதிலே அதிக வட்டியுள்ள கடன் என்பது கிரெடிட் கார்டின் மூலம் வாங்கும் கடன்தான். நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் செலுத்தாவிட்டால் ஆண்டுக்கு 36% வரை வட்டி கட்டவேண்டி இருக்கும். இது போன்ற வட்டிகள்  சில நேரங்களில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி விடும். இதை தவிர்ப்பது எப்படி ? சில வழிகள் உள்ளது. அடுத்த பக்கத்தில் பார்க்கலாம்.